Friday, January 9, 2009

நாளை என்பதும் பிறகு என்பதும்

அன்புள்ள வலை நண்பர் மற்றும் நண்பிகளோடு அறிமுகம் செய்து கொள்வதில் இக்பாவாகிய நான் பெருமை கொள்கிறேன்.

நாளை என்பதும் பிறகு என்பதும் இல்லை என்பதன் அடையாளம் (இன்றே செய் அதை நன்றே செய்)

இவ்வாக்கியம் நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எனது வகுப்பாசிரியர் பெருமதிப்பிற்குறிய பொன்னுசாமி அவர்களால் எப்பொழுதெல்லாம் அவரால் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடம் நாளை செய்கிறேன் என்று காரணம் சொல்லப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் மேலே சொல்லப்பட்ட வாக்கியத்தை நினைவூட்டியவாறே பிரம்பால் சிறிய தண்டனையை தருவார். இது 1970இல் சொல்லப்பட்ட வார்த்தையென்றாலும் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் நாளை செய்வோம் என்று எண்ணியதை எண்ணியது போல் செய்தபாடில்லை. முடிவாக எனதருமை நண்பர் சுல்தான் அவர்களின் உதவியால் வலையில் உங்களோடு இணைகிறேன். எனது இடுகைகளில் தவறுகள் இருப்பின் சுட்டிக்காண்பித்து என்னை ஊக்கமளிக்களிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

Thursday, January 1, 2009

Second Testing

What a waiting What a waiting
Lovely birds tell my darling
You are watching You are watching
Love is but a game of waiting